Wednesday 5 September 2012

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள்

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள்

18-ம் நூற்றாண்டின் இறுதியில்,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளையம் என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார்.
பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில்
லக்‌ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு”
என்றே சொல்வார்கள்.

சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு
இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால்,
ஆலயத்தில் மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன்
சித்தானந்தன் செய்து வந்தார்.
அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார்.


ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு
கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால்
சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின்
கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு-”இறைவா,உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்"
என்று சொல்லி வந்து விட்டார்.

மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு
வரவில்லை என்று கேட்க,தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும்
“இறைவனுக்கு” தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார்
என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில்
பூட்டப்பட்டிருந்தது. கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை.
உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக்
கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில்
விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.

அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு.
விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்.எவரொருவர் அனைத்தையும்
இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன்
பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன்
ஒளி விட்டு பிரகாசிப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத்
தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும்.

எய்தி வழிபடில் எய்தாதன இல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்
எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
-திருமூலர்

எய்தி வழிபட்டார்.ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள்
பெற்றார்- கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின்
அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.

ஒரு சமயம்,புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில்
வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி
அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை
கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை.
மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல
வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார்.
அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும்
முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு
காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும்
புதுவைக்கு வரச் சம்மதித்தார்.

சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க
அன்னம்மாளின் நோயும் விலகிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் நோயும் பறந்தது.
தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள்
இல்லத்திலேயே அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர்.
சுவாமிகளும் இசைந்தார்.

பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை
மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில்
உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர்.

ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை
காண்பித்தார். சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று
சொல்லி விட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு,
“இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப்
போகிறது” என்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை
தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து
பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார்.
முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார்,
சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத
பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால்
சிவனையே பூஜித்தது போல் அல்லவா?
சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு
சென்று ஆசி வழங்குவார்.
ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால்
துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல்,
முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார்.சுவாமிகளிடம்
முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை
புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம்
தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்” என்று
ஆசிர்வதித்து அனுப்பினார்.
எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும்
பேராற்றல் படைத்தவர் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட
முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும்
நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு
அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின்
திருவாக்கு படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.
ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு
வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது,
குடிகாரன் ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு
இழுத்தான். சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி
வற்புறுத்தினான். சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை.


ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
--திருமூலர்


சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார்.
பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது,
மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன்
போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான்.

சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.
பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர்.
பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை
மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள்
அங்கு சென்று அவனை மன்னித்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த குடிகாரன் தன் தவறை உணர்ந்து
சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான்.
சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார்.
ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை
முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர
பெருமானின் திருக்கட்டளைக்காக காத்திருந்தார்.

திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து
“ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும்
அறியும்படி செய் “ என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய
பத்து நாட்களுக்கு முன் நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும்
கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார்.
அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக
உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை
அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள்.


எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே
-திருமந்திரம்


ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி
என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த
பரம்பொருளாகவே நினைவில் கொண்டு வணங்கினார்கள்.
கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த
சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார்.
பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள்
சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே
மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி
தோட்டத்தில் -சுவாமிகள் சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி
கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக
காட்சியளிக்கிறது.

ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி
வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள்
நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள்.

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே

Siddhars of Tamil Nadu attained Jeeva Samadhi at the following places.

  • Sri Pathanjali - Rameswaram
  • Sri Agastyar - Thiruvananthapuram
  • Sri Kamalamuni - Thiruvarur
  • Sri Thirumoolar - Chidambaram
  • Sri Kuthambai - Mayavaram
  • Sri Korakkar - Perur
  • Sri Thanvandri - Vaideeswarankoil
  • Sri Sundaranandar - Madurai
  • Sri Konganar - Tirupathi
  • Sri Sattamuni - Thiruvarangam
  • Sri Vaanmeegar / Valmiki - Ettukudi
  • Sri Ramadevar - Azhagarmalai
  • Sri Nandeeswarar - Kasi
  • Sri Edaikkadar - Tiruvannamalai
  • Sri Machamuni - Thiruparankundram
  • Sri Bogar - Palani
  • Sri Pambatti - Sankarankoil
  • Sri Ramanujachariyar - Inside Srirangam Temple
  • Sri Devi Mayamma (Mayi amma) - Yercaud Main Road, Salem
Worshippers at these shrines believe that they achieve peace and have their prayers fulfilled and it is evident that their prayers are replied.
Siddhar Age Place of Samadhi
Sri Pathanjali 5 Yugas 7 Days Rameswaram
Sri Agastyar 4 Yugas 48 Days Thiruvananthapuram
Sri Kamalamuni 4000 Years 48 Days Thiruvarur
Sri Thirumoolar 3000 Years 13 Days Chidambaram
Sri Kuthambai 1800 Years 16 Days Mayavaram
Sri Korakkar 880 Years 11 Days Perur
Sri Thanvandri 800 Years 32 Days Vaideeswarankoil
Sri Sundaranandar 800 Years 28 Days Madurai
Sri Konganar 800 Years 16 Days Titupathi
Sri Sattamuni 800 Years 14 Days Thiruvarangam
Sri Vaanmeegar/Valmiki 700 Years 32 Days Ettukudi
Sri Ramadevar 700 Years 06 Days Azhagarmalai
Sri Nandeeswarar 700 Years 03 Days Kasi
Sri Edaikkadar 600 Years 18 Days Tiruvannamalai
Sri Machamuni 300 Years 62 Days Thiruparankundram
Sri Karuvoorar 300 Years 42 Days Karuvur
Sri Bogar 300 Years 18 Days Pazhani
Sri Pambatti 123 Years 14 Days Sankarankoil

புதுவையில் ஜீவசமாதி அடைந்து அருள் ஒளிவீசும் 41சித்தர்கள்

1  ஸ்ரீ தொள்ளகாது  சுவாமிகள் , ஸ்ரீ மனகுலவினயகர் ஆலயம்  புதுவை ,
2 . ஸ்ரீ மகான் படேசாஹிப் சுவாமிகள்  சின்னபபுசமுதிரம் , கண்டமங்கலம் 
3 .ஸ்ரீ சிதானந்த சுவாமிகள்  கருவடிக்குப்பம் புதுவை 
4 .ஸ்ரீ குரு அக்கா சுவாமிகள்  வைத்திக்குப்பம் ,புதுவை .
5 ஸ்ரீ நாராயண பரதேசி சுவாமிகள் , வைத்திக்குப்பம், புதுவை .
6 ஸ்ரீ கம்பளி  நான தேசிக சுவாமிகள் , தட்டாஞ்சாவடி  தொழிற்பேட்டை , புதுவை .
7 .ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள், 3 வது  குறுக்குத்தெரு , பிருந்தாவனம் , புதுவை .
8 . ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள் , கராமணிகுப்பம், புதுவை 
9 .ஸ்ரீ  சந்தானந்தா  சுவாமிகள்  சிருங்கேரிமடம் செரேதோப்பு எதிரே  எல்லைபில்லைசாவடி புதுவை 
10 .ஸ்ரீ சுப்ரமணிய  அபிநவசசிதானந்தா சுவாமிகள் ,சிருங்கேரிமடம் செரதொப்பு எதிரே எல்லைபில்லைச்சாவடி , புதுவை .
11 ஸ்ரீ பெரியவர்களுக்கு பெரியவர் சுவாமிகள்  தட்டஞ்ச்சாவடி, புதுவை 
12 . ஸ்ரீ வேதானந்த  சுவாமிகள் ,திருவள்ளுவர்நகர், முத்தியால்பேட்டை  புதுவை .
13 . ஸ்ரீ சடையப்பர்  சுவாமிகள் வழுதாவூர் சாலை ,ராணி மருத்துவமனை எதிரே , புதுவை 
14 .ஸ்ரீ மௌலனசாஹிப் சுவாமிகள் , முல்லா வீதி புதுவை .
15 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள் ,அம்பலத்தடையார் மடம்வீதி  புதுவை .
16 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் தென்னஞ்சாலை  ரோடு  சுப்ப்ரயபிள்ளை சமுத்திரம்  புதுவை .
17 .ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்  வில்லியனூர்  புதுவை 
18 ஸ்ரீ ராமபரதேசி  சுவாமிகள் சுல்தான்பேட்டை  வில்லியனூர் புதுவை .
 19 . ஸ்ரீ  பவழக்கொடி சித்தர்  சுவாமிகள் . சோம்பட்டு. திருக்கனூர் வழி புதுவை .
20 . ஸ்ரீ ரங்கசாமி சித்தர் சுவாமிகள்  சோம்பட்டு  திருக்கனூர் வழி , புதுவை .
21 . ஸ்ரீ தட்சணாமூர்த்தி  சுவாமிகள் , பள்ளிதென்னல், புதுவை 
22 .ஸ்ரீ  குருசாமி  அம்மாள்  சுவாமி  எ அரியூர் , புதுவை 
23 .  ஸ்ரீ ல ஸ்ரீ அருள் சக்தி  அன்னையீன்  சித்தர் பீடம் , பிள்ளையர்குப்பம், கிருமாம்பாக்கம்  , புதுவை 
24 . ஸ்ரீ ல ஸ்ரீ  உலகநாத களரானந்த சுவாமிகள்    சோரியங்குப்பம் பள்ளி  பாகூர் ,புதுவை 
25 . ஸ்ரீ அப்பர் சுவாமிகள்   எம்பலம். புதுவை .
26 . ஸ்ரீ மகான் வண்ணரபரதேசி சுவாமிகள்  ஒதியம் பட்டு  புதுவை 
27 .ஸ்ரீ வியோமா   சுவாமிகள் கன்னுவாபேட்டை, வில்லியனூர்  புதுவை .
28 .ஸ்ரீ கணபதி சுவாமிகள் , கருவடிக்குப்பம் , எடயஞ்சாவடி , புதுவை  
29 .ஸ்ரீ சிவபிரகாச  சுவாமிகள்  நல்லாத்தூர்  யாம்பலம், புதுவை .
30 ஸ்ரீ அழகர் சுவாமிகள், தென்னம்பாக்கம்  புதுவை .
31 . ஸ்ரீ கழுவெளி  சித்தர் சுவாமிகள் , திருச்சிற்றம்பலம்  இரும்பை .புதுவை 
32 ஸ்ரீ சிவஞ்ன  பாலய  சித்தர் சுவாமிகள் , பொம்மையார்  பாளையம்  புதுவை .
33 ஸ்ரீ  சிவஞ்ன  பால சித்தர்  சுவாமிகள் ,மைலம்  முருகம் கோவிலுக்கு வலபுறம்  ,.
34 ஸ்ரீ சுப்பராய பரதேசிஸ்வமிகள் , மைலம் (மூலவர் இருக்குமிடத்தில் ஜீவசமாதி) 
35 . ஸ்ரீ  பகவந் சுவாமிகள் , புதுப்பாளையம் கடலூர். 
36 .ஸ்ரீ தயானந்த சுவாமிகள் , புதுப்பாளையம்  கடலூர்.
37 ஸ்ரீ தேவராஜ் சுவாமிகள் , வன்னியனல்லூர் ,சூனம்பேடு 
38  ஸ்ரீ சத்குரு நித்தியானந்த சுவாமிகள் கோழிப்பாக்கம் அன்னகிரமாம் அருகே பட்டாம்பாக்கம் 
39 ஸ்ரீ கந்தசாமி சுவாமிகள்  காரணப்பட்டு .
40 ஸ்ரீ லக்ஷ்மண  சுவாமிகள் புத்துப்பட்டு  காலாப்பட்டு 
41 குண்டலினி சித்தர்  திருவக்கரை   திருக்கனூர் அருகில்  
இந்த 41  சித்தர்களும்  ஜீவசமாதி அடைந்து அருள் ஒழி வீசி கொண்டிருக்கிறார்கள் ....... இந்த சித்தர்களின் அருள் ஆசி பெற .... உங்கள் உள்ளம் தூய்மை பெற வேண்டும் 

உங்கள் வாழ்க்கையும் மாறும் .........! இது உங்களாலும் முடியும் ...சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்!

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்! 

சுஜாதாவின் நினைவாக அனைவருக்கும் தெரிவிக்கவும். . இனி, கட்டுரை.

வயது வந்தவர்களுக்கு ! 
உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட்தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் கலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ள்ஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவதுநம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவின விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளஞ்யே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமைஎன்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம்தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸ்னஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச்சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜால் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
http://cutepuduvai.blogspot.in/