Tuesday 9 October 2012

பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த சுந்தரர் தேவாரம்

பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் 
தொகுப்பு பற்றிய குறிப்புகள்
  • தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
  • தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
  • இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
    • பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
    • புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
  • இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
  • இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
  • இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.
திருச்சிற்றம்பலம்
1. திருவெண்ணெய்நல்லூர் பண் ஆ- இந்தளம்
கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால் மெய்த்தாயினும் ஆஇனியானைஅவ் வியன் நாவலர் பெருமான் "பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம் ஆஇத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்.
பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.
2. திருத்துறையூர் பண் - தக்கராகம்
சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து "தீவினையால் அவனெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் தவநெறிதந் தருள்" என்று தம்பிரான் முன்னின்று பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.
மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக் குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் கலையார் அல்குற்கன் னியர் ஆடும் துறையூர்த் தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
3. திருவதிகைவீரட்டானம் பண் - கொல்லிக்கௌவாணம்
செம்மாந்திங் கியானறியா தென்செய்தேன் எனத்தெளிந்து தம்மானை அறியாத சாதியார் உளரேஎன்(று) அம்மானை திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்.
தம்மானை அறியாத சாதியார் உளரெ சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத் தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை ஆஇறைபோது மிகழ்வன்போ லியானே.
4. திருக்கழுமலம் பண் - தக்கேசி
மண்டிய பேரன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித் தெண் திரை வேலையில் மிதந்த திருத் தேணி புரத் தாரைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்று ஆஇருந்த படி என்று பண்டரும் ஆஇன்னிசை பயின்ற திருப் பதிகம் பாடினார்
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத் தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின் மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை ஏதிலென் மனத்துக்கோர் ஆஇரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக் காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண்டேனே.
5. திருவாரூர் பண் - காந்தாரம்
வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞசலி கூப்பிவந்து சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி "எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும் சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்.
கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம் உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன் வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம் அரையனி ருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளீர்.
6. திருத்தொண்டத்தொகை பண் - கொல்லிக்கௌவாணம்
தொல்லைமால் வரைபயந்த தூயாள் திருப்பாகன் அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"என்று "எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி"என்றார்.
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.
7. திருக்கோளிலி பண் - நட்டராகம்
ஆளிடவேண் டிக்கொள்வார் அருகுதிருப் பதியான கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்தெய்தி "வாளன கண்மடவாள் வருந்தாமே" எனும்பதிகம் மூளவருங் காதலுடன் முன்தொழுது பாடுதலும்.
நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
8. திருநாட்டியத்தான்குடி பண் - தக்கராகம்
வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால் உச்சி குவித்த கரத்தோடும் சென்று புக்குப் பணிந்துதிருப் பதிகம் "பூணாண்" என்றெடுத்துக் கொன்றை முடியார் அருளுரிமை சிறப்பித் தார்கோட் புலியாரை.
பூணான் ஆவதொர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன் பிறவே னாகிலும் மறவேன் காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால் கருதீ ராகிலுங் கருதி நானே லும்மடி பாடுதல் ஒழியேன் நாட்டியத் தான்குடி நம்பீ
9. திருவலிவலம் பண் - தக்கேசி
அங்கு நின்றும் எழுந்தருளி அளவில் அன்பின் உள்மகிழ்ச் செங்கண் நுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டேன்"என்(று) எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.
ஊனங் கத்துபயிர் பாய்உல கெல்லாம் ஓங்கா ரத்துரு ஆகிநின் றானை வானங்கத் தவர்க் கும்அளப் பரிய வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத் தேனங் கத்தமு தாகிஉள் ளூறும் தேச னைத்திளைத் தற்கினி யானை மானங் கைத்தலத் தேந்தவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
10. திருப்புகலூர் பண் - கொல்லி
தொண்டர் உணரமகிழிந்தெழுந்து துணைக்கைக் கமலமுகைதலைமேல் கொண்டு கோயிலுட்புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்பு மண்டு காதலுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை பண்டங் கிசையில் "தம்மையே புகழ்ந்" தென் றெடுத்துப் பாடினார்.
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும் சார்வி னுந் தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே
11. திருப்பனையூர் பண் - சீகாமரம்
செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி எய்த அருள எதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி ஐயர் தம்மை "அரங்காட வல்லார் அவரே அழகியர்" என்(று) உய்ய உலகு பெரும்பதிகம் பாடி அருள்பெற் றுடன்போந்தார்.
மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில் பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த் தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்(று) ஆடு மாறுவல்லார் அவரே அழகியரே.
12. திருநன்னிலத்துப்பெருங்கோயில் பண் - பஞ்சமம்
பலநாள் அமர்வார் பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய்ச் சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச் சென்றெய்தி வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலமார்கின்ற "தண்ணியல்வெம் மையினான்" என்னுந் தமிழ்மாலை.
தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும்பலி பண்ணியல் மென்மொழியார் இடக் கொண்டுழல் பண்டரங்கன் புண்ணிய நான்மறையோர் முறையால்அடி போற்றிசைப்ப நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
13. திருவீழிமிழலை பண் - சீகாமரம்
படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி "அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியே னுக்கும் அருளும்" எனத் தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி அங்குச் சாருநாள்.
நம்பினார்க்கருள் செய்யு மந்தணர் நான்ம றைக்கிட மாயவேள்வியுள் செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலை உம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளோடும் முடனே உறைவிடம் அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.
14. திருவாஞ்சியம் பண் - பியந்தைக்காந்தாரம்
வாசி யறிந்து காசளிக்க வல்ல மிழலை வாணர்பால் தேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள் பாச மறுத்தாட் கொள்ளுந்தாள் பணிந்து "பொருவ னார்" என்னும் மாசில் பதிகம் பாடிஅமர்ந் தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.
பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவளோடு மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள் திருவ னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும் ஒருவ னார் அடியாரை ஊழ்வினை நலியஒட் டாரே.
15. திருவாவடுதுறை பண் - தக்கேசி
விளங்குந் திருவா வடுதுறையில் மேயார்கோயில் புடைவலங்கொண்(டு) உளங்கொண் டுருகும் அன்பினுடன் உள்புக் கிறைஞ்சி ஏத்துவார் வளங்கொள் பதிகம் "மறையவன்"என் றெடுத்து வளவன் செங்கணான் தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலை சாத்தினார்.
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மான் என்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
16. திருநாகேச்சரம் பண் - பஞ்சமம்
பெருகும் பதிகம் "பிறையணிவாள் நுதலாள்" பாடிப் பெயர்ந்துநிறை திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி உருகுஞ் சிந்தை யுடன்போந்தே உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து மருவும் பதிகள் பிறபணிந்து கலைய நல்லூர் மருங்கணைந்தார்.
பிறையணி வாள்நுதளாள் உமையாளவள் பேழ்கணிக்க நிறைபணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே குறைபணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல் சிறைபணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே.
17. திருக்கலயநல்லூர் பண் - தக்கராகம்
செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் மும்மை வணக்கம் பெறஇறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார் கொம்மை மருவு "குரும்பைமுலை உமையாள்" என்னுந் திருப்பதிகம் மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்(து) இசையின் விளம்பினார்.
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில் அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.
18. திருச்சோற்றுத்துறை பண் - கௌசிகம்
"அழல்நீர் ஒழுகி அனைய" எனும் அஞ்சொற் பதிகம் எடுத்தருளிக் கழல்நீ டியஅன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின் கெழுநீர் மையினில் அருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர் முழுநீ றணிவார் அமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்
அழல்நீர் ஒழுகி அனைய சடையும் உழையீர் உரியும் உடையான் இடமாம் கழைநீர் முத்துங் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.
19. திருமழபாடி பண் - நட்டராகம்
அணைந்து திருக்கோ புரம்இறைஞ்சி அன்பர் சூழ உடன்புகுந்து பணங்கொள் அரவம் அணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக் குணங்கொள் அருளின் திறம்போற்றிக் கொண்டபுளகத் துடனுருகிப் புணர்ந்த இசையால் திருப்பதிகம் "பொன்னார் மேனி" என்றெடுத்து.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னெ உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
20. திருவானைக்கா பண் - காந்தாரம்
மறைகளாய நான்கும் என மலர்ந்த செம் சொல் தமிழ் பதிகம் நிறையும் காதல் உடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று ஏத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்து அருளி
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந் துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாய அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் இஆறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
21. திருப்பாச்சிலாச்சிராமம் பண் - தக்கராகம்
நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்து இடைப் புலம் கெழும் பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்து அடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இலையோ என்பார் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினார் தொண்டர்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை உரைத்தக்கால் உவமனே ஒக்கும் பைத்தபாம் பார்த்தோர் கோவணத் தோடு பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் பித்தரே யொத்தோர் நச்சில ராகில் ஆ இவரலா தில்லையோ பிரானார்.
இவ் வகை பரவித் திருக்கடைக் காப்பும் ஏசின வல்ல என்று இசைப்ப மெய் வகை விரும்பு தம் பெருமானார் விழுநிதிக் குவை அளித்து அருள மை வளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதி இடை வைகி எவ் வகை மருங்கும் இறைவர் தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சில நாள்
ஏசின அல்ல ஆ இகழ்ந்தன அல்ல எம்பெரு மானென்றெப் போதும் பாயின புகழான் பாச்சிலாச் சிராமத்தடிகளை அடிதொழப் பன்னாள் வாயினாற் கூறி மனத்தினால் நினைவான் வளவயல் நாவலா ரூரன் பேசின பேச்சைப் பொறுக்கில ராகில் ஆவரலா தில்லையோ பிரானார்.
22. திருப்பைஞ்ஞீலி பண் - கொல்லி
கண்டவர் கண்கள் காதல் நீர் வெள்ளம் பொழிதரக் கை குவித்து இறைஞ்சி வண்டறை குழலார் மனம் கவர் பலிக்கு திரு வடிவு கண்டவர்கள் கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அருந் தமிழ் புனைந்தார்
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டவெண்டலை யோடுகொண் டூஆரெலாந்திரிந் தென்செய்வீர்பலிஓரிடத்திலே கொள்ளும்நீர் பாரெலாம்பணிந் தும்மையேபரவிப்பணியும்பைஞ் ஞீலியீர் ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே.
23. திருப்பாண்டிக்கொடுமுடி பண் - பழம்பஞ்சுரம்
அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்சு எழுத்து அறிய எப் பொழுதும் எண்ணிய நாவே இன் சுவை பெருக இடை அறாது இயம்பும் என்றும் இதனைத் திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றுஇலேன் எனச் செழும் தமிழால் நண்ணிய அன்பில் பிணிப்பு உற நவின்றார் நமச்சிவாயத் திருப் பதிகம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேனி னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்சொல்லும் நாநமச்சி வாயவே.
24. திருப்புறம்பயம் பண் - கொல்லி
அங்கம் ஓதி ஓர் ஆறை மேல் தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம் பயந்து தொழப் போதும் என்று எங்கும் மன்னிய இன் இசை பதிகம் புனைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவும் திருப் புறம் பயம் சேரவே
அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளிநின்றும்போந்துவந் தின்னம்பர்த் தங்கினோமையும் இஆன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமே கங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும் பொங்குமால்விடை யேறிசெல்வப்புறம்பயந்தொழப் போதுமே.
25. திருக்கூடலையாற்றூர் பண் - புறநீர்மை
கண்டவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் வண்டலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி அண்டர் தம் பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினேடும் கூடலை யாற்றூர் புக்கார்
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகளிவ் வழிப்போந்த அதிசயம் அறியேனே.
26. திருமுதுகுன்றம் பண் - கொல்லிக்கௌவாணம்
தட நிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடம் நவில்வாரை நஞ்சி இடை எனும் செம் சொல்மாலைத் தொடை நிகழ் பதிகம் பாடித் தொழுது கை சுமந்து நின்று
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார் துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர் பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள் முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
27. நம்பி என்ற திருப்பதிகம் பண் - தக்கேசி
நாதர் பால் பொருள் தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் கோதறு மனத்துள் கொண்ட குறிப் பொடும் பரவும் போது தாது அவிழ் கொன்றை வேய்ந்தார் தர அருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண் பொடியும் பாட
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
28. கோயில் பண் - குறிஞ்சி
மடித்து ஆடும் அடிமைக்கண் என்று எடுத்து மன் உயிர் கட்கு அருளும் ஆற்றல் அடுத்து ஆற்று நல் நெறிக்கண் நின்றார்கள் வழுவி நரகு அணையா வண்ணம் தடுப்பானைப் பேரூரில் கண்ட நிலை சிறப்பித்துத் தனிக் கூத்து என்றும் நடிப்பானை நாம் மனமே பெற்றவாறு எனும் களிப்பால் நயந்து பாடி
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் ஆடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
29. திருக்கருப்பறியலூர் பண் - நட்டராகம்
கூற்று உதைத்தார் திருக் கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுது புகுந்து அன்பர் சூழ ஏற்ற பெரு காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லை இலாப் பெரு மகிழ்ச்சி மனத்தில் எய்தப் போற்றிசைத்துப் புறத்து அணைந்தப் பதியில் வைகிப் புனிதர் அவர் தமை நினையும் இன்பம் கூறி சாற்றிய மெய்த் திருப் பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ் மாலை புனைந்து ஆங்குச் சாரும் நாளில்
சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங் கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க் கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில் எம்மானை மனத்தினால் நினைந்தபோதவர்நமக் கினிய வாறே.
கண் நுதலார் விரும்பு கருப் பறியலூரைக் கை தொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும் மண்ணி வளம் படிக் கரையை நண்ணி அங்கு மாது ஒரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி எண்ணில் புகழ்ப் பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளி புத்தூர் எய்தாது புண்ணியனார் போம் பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி
30. திருப்பழமண்ணிப்படிக்கரை பண் - நட்டராகம்
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான் சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான் மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப் பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
31. திருவாழ்கொளிபுத்தூர் பண் - தக்கேசி
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத் தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக் கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக் கூற்றுதைத் தகுரை சேர்கழ லானை அலைத்த செங்கண்விடை ஏறவல் லானை ஆணை யால்அடி யேன்அடி நாயேன் மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
32. திருக்கானாட்டுமுள்ளூர் பண் - கொல்லிக்கௌவாணம்
கான் நாட்டு முள்ளூரைச் சாரும் போது கண் நுதலார் எதிர் காட்சி கொடுப்பக் கண்டு தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப் பாத மலர் கண்டு தொழுதேன் என்று வான் ஆளும் திருப் பதிகம் வள்வாய் என்னும் வன் தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் தேன் ஆரும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த திருஎதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார்
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானை மறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப் புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப் பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானை முள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்று மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ் கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக் கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர் கொள் பாடியினை அடைவோம் என்னும் சித்த நிலைத் திருப்பதிகம் பாடி வந்து செல்வம் மிகு செழும் கோயில் இறைஞ்சி நண்ணி அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள் பெற்றுத் திரு வேள்விக் குடியில் எய்தி முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட மூப்பதிலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார்
33. திருஎதிர்கொள்பாடி பண் - இஆந்தளம்
மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் செத்த போதில் ஆரும் ஆ இல்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள் பாடி என்ப தடைவோமே.
34. திருவேள்விக்குடி பண் - நட்டராகம்
மூப்பதும் இஆல்லை பிறப்பதும் இஆல்லை இஆறப்பதில்லை சேர்ப்பது காட்டகத் தூரினுமாகச்சிந் திக்கினல்லாற் காப்பது வேள்விக் குடிதண்டுருத்தியெங் கோன்அரைமேல் ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல்நாமிவர்க் காட்படோமே.
35. திருமுதுகுன்றம் பண் - நட்டராகம்
முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை தன் செய்ய வாயில் நகை தாராமே தாரும் என மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முது குன்றில் பொன் செய்த மேனியினீர் எனப் பதிகம் போற்றிசைத்து
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே.
ஏத்தாதே இருந்து அறியேன் எனும் திருப்பாட்டு எவ்வுலகும் காத்தாடும் அம்பலத்துக் கண்ணுளனாம் கண் நுதலைக் கூத்தாதந்து அருள்வாய் இக் கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர் அரிய நெறி நின்றார் பரவுதலும்
ஏத்தா திருந்தறியேன் இஆமையோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே.
36. நமக்கடிகளாகிய - அடிகள் பண் - கொல்லி
பண்ணிறையும் வகை பாறு தாங்கி என எடுத்து அருளி உண்ணிறையும் மனக் களிப்பால் உறு புளகம் மயிர் முகிழ்ப்ப கண்ணிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண்ணிறைந்த படி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்
பாறுதாங்கிய காடரோபடுதலையரோமலைப் பாவையோர் கூறுதாங்கிய குழகரோகுழைக்காதரோகுறுங் கோட்டிள ஏறுதாங்கிய கொடியரோசுடுபொடியரோ ஆ இலங் கும்பிறை ஆறுதாங்கிய சடையரோநமக்கடிகளாகிய அடிகளே.
37. திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்
அங்கண்ணரைப் பணிந்து ஏத்தி அருளினால் தொழுது போய் மங்குல் அணி மணி மாடத் திருக் கடவூர் வந்து எய்தித் திங்கள் வளர் முடியார் தம் திருமயானமும் பணிந்து பொங்கும் இசைப் பதிகம் மருவார் கொன்றை எனப் போற்றி
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இஆந்திரற்குந்தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
38. திருக்கடவூர்வீரட்டம் பண் - நட்டராகம்
திரு வீரட்டானத்துத் தேவர் பிரான் சினக் கூற்றின் பொரு வீரந்தொலைத்த கழல் பணிந்து பொடியார் மேனி மருஈரத் தமிழ் மாலை புனைந்து ஏத்தி மலை வளர்த்த பெரு வீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத் தொடும் சென்றார்
பொடியார் மேனியனே புரிநூலொரு பாற்பொருந்த வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடுங் கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம் அடிகேள் என்னமுதே எனக்கார்துணை நீயலதே.
39. திருவலம்புரம் பண் - காந்தாரம்
வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி உரை ஓசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் நிரையோடு துமித் தூப மணித் தீபம் நித்திலப் பூம் திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார்
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன் பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
40. திருநின்றியூர் பண் - தக்கேசி
நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம் சொல் திருப் பதிகம் அருள் செய்தார்
திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ் சிலந்தி யார்செய்த செய்பணி கண்டு மருவு கோச்செங்க ணான்றனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன் பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. அணிகொள் ஆடையம் பூண்அணி மாலை அமுது செய்தமு தம்பெறு சண்டி இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன் கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காத லின்னருள் ஆதரித் தடைந்தேன் திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
41. திருநீடூர் பண் - தக்கேசி
மடல் ஆரும் புனல் நீடூர் மருவினர் தாள் வணங்காது விடல் ஆமே எனும் காதல் விருப்பு உறும் அத்திருப்பதிகம் அடல் ஆர் சூலப் படையார் தமைப் பாடி அடிவணங்கி உடல் ஆரும் மயிர்ப் புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே.
42. திருக்கோலக்கா பண் - தக்கேசி
திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு ஆர்வத்துடன் பாட பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருள் மாலைத் திருப்பதிகம் பாடியே போற்றி இசைத்தார்
புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார் பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானை முற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக் கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே. நாளும் இஆன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இஆறைஞ்சுங் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
43. திருக்குருகாவூர் பண் - நட்டராகம்
சித்த நிலை திரியாத திரு நாவலுர் மன்னர் அத்தகுதி யினில் பள்ளி உணர்ந்தவரை காணாமை இத்தனையா மாற்றம் அறிந்திலேன் என எடுத்து மெய்த் தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார்
இஆத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
44. திருநாவலூர் பண் - நட்டராகம்
மேவிய அத் தொண்ட குழாம் மிடைந்து அர என்று எழும் ஓசை மூவுலகும் போய் ஒலிப்ப முதல் வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடிக் கமலத்து அருள் போற்றிக் கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார்
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய மேவலர் முப்புரம் தீயெழு வித்தவன் ஓரம்பினால் ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.
45. திருக்கச்சூர் ஆலக்கோயில் பண் - கொல்லிக்கௌவாணம்
முதுவாயோரி என்று எடுத்து முதல்வனார் தம் பெரும் கருணை அதுவாம் என்றுஅதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவி புதுவார் புனலின் மயிர் புளகம் புதையப் பதிகம் போற்றி இசைத்து மதுவார் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார்
முதுவாய் ஓரி கதற முதுகாட்டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்கண்டால் அடியார் கவலாரே அதுவே ஆமா றிதுவோ கச்சூர்ஆலக் கோயில் அம்மானே.
46. திருக்கச்சிமேற்றளி பண் - நட்டராகம்
சீரார் காஞ்சி மன்னும் திருக் காமக் கோட்டம் சென்று இறைஞ்சி நீரார் சடையார் அமர்ந்து அருளும் நீடு திரு மேற்றளி மேவி ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண்சுடராம் பாரார் பெருமைத் திருப் பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்
நொந்தா ஒண்சுடரே நுனையே நினைந்திருந்தேன் வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற சிந்தாய் எந்தைபிரான் திருமேற் றளியுறையும் எந்தாய் உன்னையல்லால் ஆ இனியேத்த மாட்டேனே.
47. திருஓணகாந்தன்றளி பண் - இஆந்தளம்
ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத் திறம் பேசிக் காண மோடு பொன் வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் யாணர்ப் பதிகம் எடுத்து ஏத்தி எண்ணில் நிதி பெற்று இனிது இருந்தார்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசனை செய்ய லுற்றார் கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் றளியு ளீரே.
48. திருக்கச்சிஅனேகதங்காவதம் பண் - ஆஇந்தளம்
அங்கண் அமர்வார் அனே கதங்கா பதத்தை எய்தி உள்ளணைந்து செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் தங்கும் இடமாம் எனப்பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்த பதியில் பொருந்தும் நாள்
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெருமானதி டந்திகழ் ஐங்கணையக் கோனை யெரித்தெரி யாடி ஆடங்குலவான திடங்குறை யாமறையாம் மானை ஆ இடத்ததோர் கையனி டம்மதமாறு படப்பொழி யும்மலைபோல் யானை யுரித்த பிரான திடங்கலிக்கச்சி அனேகதங் காவதமே.
49. திருவன்பார்த்தான்பனங்காட்டூர் பண் - சீகாமரம்
செல்வம் மல்கு திருப் பனங் காட்டூரில் செம் பொன் செழும் சுடரை அல்லல் அறுக்கும் அரு மருந்தை வணங்கி அன்புபொழி கண்ணீர் மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண் தமிழப் பதிகம் நல்ல இசையின் உடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார்
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை அடையில்அன் புடையானையாவர்க்கும் அறியொண்ணா மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச் சடையிற்கங்கை தரித்தானைச்சாராதார் சார்பென்னே.
50. திருக்காளத்தி பண் - நட்டராகம்
வணங்கி உள்ளம் களி கூர மகிழ்ந்து போற்றி மதுர இசை அணங்கு செண்டாடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னும் பதி இணங்கும் தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
51. திருவொற்றியூர் பண் - குறிஞ்சி
ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் நாட்ட மலரும் திரு நுதலார் நறும் பொன் கமலச் சேவடியில் கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோதில் இசை கூடப் பாட்டும் பாடி பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார்
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே.
52. திருவாரூர் பண் - பழம்பஞ்சுரம்
மின்னொளிர் செஞ்சடையானை வேத முதல் ஆனானை மன்னு புகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து பன்னிய சொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார்
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன் பொத்தினநோ யதுவிதனைப்பொருளறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இஆறைவனையே.
53. திருவொற்றியூர் பண் - தக்கேசி
அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி வழுத்து நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாதோர் பாகனார் மலர்ப்பதம் உன்னி இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும் பழிக்கும் வெள்கி நல் இசை கொடு பரவி பணிந்து சாலவும் பல பல நினைவார்
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
54. வடதிருமுல்லைவாயில் பண் - தக்கேசி
அங்கு நாதர் செய் அருளது ஆக அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து திங்கள் வேணியார் திரு முல்லைவாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் சங்கிலிக்காக என் கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்து மூடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
55. திருவெண்பாக்கம் பண் - சீகாமரம்
பிழை உள்ளன பொறுத்திடுவர் என்று எடுத்துப் பெண் பாகம் விழைவடிவில் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார் மழை தவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார்
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்காற் பழியதனைப் பாராதே படலமென்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயிலுளா யோயென்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர் என்றானே.
56. திருவாலங்காடு பண் - பழம்பஞ்சுரம்
முன் நின்று தொழுது ஏத்தி முத்தா என்று எடுத்து அருளிப் பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் அந் நின்று வணங்கிப் போய்த் திருவூறல் அமர்ந்து இறைஞ்சிக் கன்னி மதில் மணி மாடக் காஞ்சி மா நகர் அணைந்தார்
முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையா ளுமைபங்கா சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர்போற்றும் பரமா பழைய னூர்மேய அத்தா ஆலங் காடாவுன் அடியார்க் கடியேன் ஆவேனே.
57. திருவேகம்பம் பண் - தக்கேசி
ஞாலந்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் மூலந்தான் அறிய அரியார் கண் அளித்து முலைச்சுவட்டுக் கோலந்தான் காட்டுதலும் குறுகி விழுந்து எழுந்து களித்து ஆலந்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார்
ஆலந் தானுகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
58. திருவாரூர் பண் - புறநீர்மை
அந்தியும் நண் பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் எந்தை பிரான் திருவாரூர் என்று கொல் எய்துவது என்று சந்த இசை பாடிப் போய்த் தாங்க அரிய ஆதரவு வந்து அணைய அன்பர் உடன் மகிழ்ந்து வழி கொள்கின்றார்
அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக் கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
59. திருநெல்வாயில் அரத்துறை பண் - இஆந்தளம்
அந் நாட்டின் மருங்கு திரு அரத் துறையைச் சென்று எய்தி மின்னாரும் படை மழுவார் விரை மலர்த்தாள் பணிந்து எழுந்து சொன்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி மன்னார்வத்து திருத்தொண்டர் உடன் மகிழ்ந்து வைகினார்
கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங் கலந்துந் திவருந் நிவவின் கரைமேல் நெல்வா யில்அரத் துறைநீ டுறையும் நிலவெண் மதிசூ டியநின் மலனே நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன் தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.
60. திருவாவடுதுறை பண் - தக்கேசி
அங்கணைவார் தமை அடியார் எதிர் கொள்ளப் புக்கு அருளிப் பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டுள்ளணைந்து கங்கை வாழ் சடையாய் ஓர் கண்ணிலேன் எனக் கவல்வார் இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார்
கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலே பொங்கு மாகடல் விடமிடற் றானே பூத நாதனே புண்ணியா புனிதா செங்கண் மால்விடை யாய்தெளி தேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள் அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
61. திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம்
கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து மண்டு பெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் எண்திசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்து இசைத்தார்
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி ஆ இடர்கெடுத் தானை.
62. திருவாரூர்ப்பரவையுண்மண்டளி பண் - பஞ்சமம்
பொங்கு திருத்தொண்டருடன் உள்ளணைந்து புக்கு இறைஞ்சி துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே இங்கு எமது துயர் களைந்து கண் காணக் காட்டாய் என்று அம் கணர் தம் முன் நின்று பாடி அருந்தமிழ் புணைந்தார்
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயே கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற் காவாவென் பரவையுண் மண்டளி யம்மானே.
63. திருவாரூர் பண் - கொல்லி
ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக் கோதில் இசையால் குருகுபாய எனக் கோத்து எடுத்தே ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் காதல் புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார்
குருகுபா யக்கொழுங் கரும்புகள் நெரிந்தசா றருகுபா யும்வயல் அந்தணா ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே.
64. திருவாரூர் பண் - செந்துருத்தி
மீளா அடிமை என எடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் மாளமே நஞ்சு உண்டு அருளி மன்னி இருந்த பெருமானைத் தாளா தரிக்கும் மெய் அடியார் தமக்கு ஆம் இடர் நீர் தரியீர் என்று ஆளாம் திருத் தோழமைத் திறத்தால் அஞ்சொல் பதிகம் பாடினார்
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்றுமுகத்தால் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.
65. திருப்புன்கூர் பண் - தக்கேசி
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே பொருவரும் மகிழ்ச்சி பொங்கத் திருபுன் கூர் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று வன் தொண்டர் தம்பிரானார் அருளினை நினைந்தே அந்தணாளன் என்று எடுத்து பாடி
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன் எந்தை நீயெனை நமன்றமர் நலியின் ஆ இவன்மற் றென்னடி யானென விலக்குஞ் சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
66. திருநாகைக்காரோணம் பண் - கொல்லிக்கௌவாணம்
நம்பி தாமும் அந் நாள் போய் நாகைக் காரோணம் பாடி அம் பொன் மணிப்பூண் நவமணிகள் ஆடை சாந்தம் அடல் பரிமா பைம் பொன் சுரிகை முதலான பெற்று மற்றும் பல பதியில் தம்பிரானைப் பணிந்து ஏத்தித் திருவாரூரில் சார்ந்து இருந்தார்
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாளிரங்கீர் முத்தாரம் ஆ இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
67. திருமறைக்காடு பண் - காந்தாரம்
நிறைந்த மறைகள் அர்ச்சித்த நீடு மறைக்காட்டு அருமணியை இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து போற்றி யாழைப் பழித்து என்னும் அறைந்த பதிகத் தமிழ் மாலை நம்பி சாத்த அருள் சேரர் சிறந்த அந்தாதியில் சிறப்பித்து அனவே ஓதித் திளைத்து எழுந்தார்
யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான் இஆடம் பேணில் தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
68. திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி
கோடிக் குழகர் கோயில் அயல் குடிகள் ஒன்றும் புறத்து எங்கும் நாடிக் காணாது உள்புக்கு நம்பர் பாதம் தொழுது உள்ளம் வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று எடுத்து மலர்க் கண்ணீர் வாரப் பாடிக் காடு காள் புணர்ந்த பரிசும் பதிகத்து இடை வைத்தார்
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற் குடிதான் அயலே இஆருந் தாற்குற்ற மாமோ கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக ஆருந்தீரே.
69. திருப்பூவணம் பண் - ஆஇந்தளம்
நீடு திருப் பூவணத்துக் கணித்தாக நேர் செல்ல மாடு வரும் திருத்தொண்டர் மன்னிய அப் பதிகாட்டத் தேடு மறைக்கு அரியாரைத் திருவுடையார் என்று எடுத்துப் பாடி இசையில் பூவணம் மீதோ என்று பணிந்து அணைவார்
திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.
70. திருப்பரங்குன்றம் பண் - இஆந்தளம்
கோத்திட்டை என்று எடுத்துக் கோதில் திருப்பதிக இசை மூர்த்தியார் தமை வணங்கி முக்கோக்கள் உடன் முன்பே ஏத்திய வண் தமிழ் மாலை இன் இசைப் பாடிப் பரவி சாத்தினார் சங்கரனார் தங்கு திருப்பரங்குன்றில்
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண் டீருமைக் கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச் சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ் சில்பூத மும்நீ ருந்திசை திசையன சோத்திட்டு விண்ணோர் பலருந் தொழநும் அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந் தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம் படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென் றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும் படியா இஆவைகற் றுவல்ல அடியார் பரங்குன்ற மேய பரமன் அடிக்கே குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக் குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
71. திருச்சுழியல் பண் - நட்டபாடை
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் மலைச் சிலையாரைக் கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் கடல் விடத்தின் இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி எதிர் இதழி மலர்ப் பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் எனும் பா மலர் புனைந்தார்
ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும் வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின் தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல் நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
72. திருக்கானப்பேர் பண் - புறநீர்மை
கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப் புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய் அண்டர் பிரான் திருக்கானப்பேர் அணைவார் ஆரூரர் தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார்
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி ஆளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங் கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோளுங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக் கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
73. திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம்
புனல் வாயில் பதி அமர்ந்த புனிதர் ஆலயம் புக்கு மனம் ஆர்வம் உறச் சித்த நீ நினை என்னொடு என்றே வின வான தமிழ் பாடி வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில் சினயானை உரித்து அணிந்தார் திருப்பாதம் தொழுது இருந்தார்
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும் மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர் பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
74. திருவையாறு பண் - காந்தாரபஞ்சமம்
பரவும் பரிசு ஒன்று எடுத்து அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில் அரவம் புனைவார் தமை ஐயாறு உடைய அடிகளோ என்று விரவும் வேட்கை உடன் அழைத்து விளங்கும் பெருமைத் திருப்பதிகம் நிரவும் இசையில் வன்தொண்டர் நின்று தொழுது பாடுதலும்
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
75. முடிப்பதுகங்கை பண் - கொல்லிக்கௌவாணம்
இறைவர் கோயில் மணி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு நிறையும் காதல் உடன் வீழ்ந்து பணிந்து நேர் நின்று ஆரூரர் முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது கங்கை என்று எடுத்துப் பிறை கொள் முடியார் தமைப்பாடி பரவிப் பெருமாளுடன் தொழுதார்
முடிப்பது கங்கையுந் திங்களுஞ் செற்றது மூவெயில் நொடிப்பது மாத்திரை நீறெ ழக்கணை நூறினார் கடிப்பது மேறுமென் றஞ்சு வன்றிருக் கைகளாற் பிடிப்பது பாம்பன்றி ஆல்லை யோவெம் பிரானுக்கே.
76. திருவாரூர் பண் - தக்கேசி
நாவலர் தம் பெருமானும் திருவாரூர் நகர் ஆளும் தேவர் பிரான் கழல் ஒரு நாள் மிக நினைந்த சிந்தையராய் ஆவியை ஆரூரானை மறக்கலுமாமே என்னும் மேவிய சொல் திருப்பதிகம் பாடியே வெருவுற்றார்
பொன்னும் மெய்ப்பொரு ளுந்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப் பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானை அன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூ ரானை மறக்கலு மாமே.
77. திருமுருகன்பூண்டி பண் - பழம்பஞ்சுரம்
உருகிய அன்பொடு கைகள் குவித்து விழுந்து உமைபாகம் மருவிய தம் பெருமான் முன் வன்தொண்டர் பாடினார் வெருவுறவேடுவர் பறிக்கும் வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு அருகு இருந்தீர் எனக்கு கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டாற லைக்கு மிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய் இஆடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
78. திருப்புக்கொளியூர் அவிநாசி பண் - குறிஞ்சி
உரைப்பார் உரை என்று எடுத்த திருப்பாட்டு முடியாமுன் உயர்ந்த வரைப் பான்மையில் நீள் தடம்புயத்து மறலி மைந்தன் உயிர் கொணர்ந்து திரைப்பாய் புனலின் முதலைவாயில் உடலில்சென்ற ஆண்டுகளும் தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலை வாயில் தருவித்தான்
எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற் புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே. உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
79. திருஅஞ்சைக்களம் பண் - ஆஇந்தளம்
கரிய கண்டர் தம் கோயிலை வலம் கொண்டு காதலால் பெருகு அன்பு புரியும் உள்ளத்தர் உள்ளணைந்து இறைவர் தம் பூம் கழல் இணை போற்றி அரிய செய்கையில் அவனியில் விழுந்து எழுந்து அலைப்புறும் மனை வாழ்க்கை சரியவே தலைக்குத் தலை மாலை என்று எடுத்தனர் தமிழ் மாலை
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற்கங் கைவெள்ளந் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே மலைக்குந் நிகரொப் பனவன் றிரைகள் வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
80. திருநொடித்தான்மலை பண் - பஞ்சமம்
யானை மேல் கொண்டு செல்கின்ற பொழுதினில் இமையவர் குழாம் என்னும் தானை முன் செலத் தானெனை முன் படைத்தான் எனும் தமிழ் மாலை மானவன் தொண்டர் பாடி முன் அணைந்தனரர் மதி நதி பொதி வேணித் தேன் அலம்பு தண் கொன்றையார் திருமலைத் தென்திசைத் திருவாயில்
தானெனை முன்படைத் தானதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே.
திருச்சிற்றம்பலம்

பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எடுத்துத்தந்த அப்பர் தேவாரம்

பெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள் 
தொகுப்பு பற்றிய குறிப்புகள்
  • தெய்வச் சேக்கிழார் மூவர் தேவாரங்களை அடியொற்றி மூவர் தம் வரலாறுகளைப் போற்றுவது வெளிப்படையாகக் காணத்தக்கது.
  • தேவாரங்களைக் குறிப்பதோடு அல்லாமல் அவற்றின் மையக் கருத்துக்களைச், சொற்றொடர்களை பலவாகச் சிரமேற்கொண்டு பெரிய புராணத்தில் போற்றியுள்ளார்.
  • இத்தொகுப்பு கீழ்க்காணும் முறையைப் பின்பற்றித் தொகுக்கப்பட்டது.
    • பெரிய புராணத்தில் தேவாரத்தில் காணும் சொற்றொடர்களே காணப்படுவது. (உ-ம். தோடுடைய செவியன்)
    • புராணத்தில் தேவாரத்தில் கூறப்பட்ட மையக் கருத்து வெளிப்படுத்தப்படுவது. (உ-ம். நமிநந்தி அடிகள் திருத்தொண்டின் நன்மை .. பாடி)
  • இத்தொகுப்பின் நோக்கம் தேவாரப் பாடல்களோடு அவற்றைக் குறிக்கும் பெரிய புராணப் பாடல்களையும் அடியவர்கள் அதே இசையில் பாடித் திருவருள் பெற வேண்டும் என்பதே.
  • இத்தொகுப்பு பலமுறை பெரிய புராணத்தில் மீண்டும் மீண்டும் சரி பார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. எனினும் பிழைகள் இன்னும் இருக்கக்கூடும். செம்மலர் நோன்தாளைத் தொழும் அடியவர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தல் கோருகின்றோம்.
  • இத்தொகுப்பு பாட்டே விரும்பும் அருச்சனையாகக் கொள்ளும் இசை விரும்பும் கூத்தனார் திருவடிகளுக்கு அஞ்சலி.
  • திருச்சிற்றம்பலம்
    1. திருவதிகைவீரட்டானம் பண் - கொல்லி
    நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறைஅன்புறு சிந்தையில் நேசமிக மாற்றார்புரம் மாற்றிய வேதியர் மருளும்பிணி மாயை அறுத்திடுவான், "கூற்றாயின வாறுவிலக்ககிலீர்" எனநீடிய கோதில் திருப் பதிகம், போற்றாலுல கேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால். இத் தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இந் நெடுநாள் சித்தம் திகழ் தீவினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா அத்தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே.
    கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய் ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
    2. பொது (மறுமாற்றத் திருத்தாண்டகம்) திருத்தாண்டகம்
    "நாமார்க்கும் குடியல்லோம்" என்றெடுத்து நான்மறையின் கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத் தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி "ஆமாறு நீரழைக்கும் அடைவிலம்" என் றருள் செய்தார்.
    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்திலிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளு ந்துன்ப மில்லை, தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
    3. பொது திருக்குறுந்தொகை
    வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவம் தைவருதண் தெண்றல்அணை தண்கழு நீர் தடம்போன்று மொய்யொளிவெண் ணிலவளர்ந்து முரன்றயாழ் ஒலியினதாய் ஐயர்திரு வடிநீழல் அருளாகிக் குளிர்ந்ததே
    மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
    4. திருநனிபள்ளி திருநேரிசை
    நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே செஞ்சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால் வெஞ்சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்
    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந் திராதே அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும் வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
    5. திருவதிகை வீரட்டானம் பண் - காந்தாரம்
    அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச் "சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை மண்ணுல குய்ய எடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார். வஞ்சகர் விட்ட சினப் போர் மதவெங் களிற்றினை நோக்கிச் செஞ்சடை நீள் முடிக் கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார் வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம் அடியோம் நாம் அஞ்சுவது இல்லை என்று என்றே அருந்தமிழ் பாடி உறைந்தார்
    சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை
    6. பொது (நமச்சிவாயத் திருப்பதிகம்) பண் - காந்தார பஞ்சமம்
    "சொற்றுணை வேதியன்" என்னுந் தூய்மொழி நற்றமிழ் மாலையா "நமச்சி வாய" என்(று) அற்றமுன் காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.
    சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதோழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
    7. திருப்பாதிரிப் புலியூர் திருநேரிசை
    "ஈன்றாளு மாயெனக் கெ¨ந்தையு மாகி" எனஎடுத்துத் "தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்(கு)" என்று வான்தாழ் புனற்கங்கை வாழ்சடை யானைமற் றெவ்வுயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே.
    ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே
    8. திருவதிகை வீரட்டானம் ஏழைத் திருத்தாண்டகம்
    உம்பர்தங் கோனைஉடைய பிரானைஉள் புக்கிறைஞ்சி நம்புறும் அன்பின் நயப்புறு காதலி னால்திளைத்தே எம்பெரு மான்தனை ஏழையேன் நான்பண் டிகழ்ந்த"தென்று தம்பரி வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
    வெறிவிரவு கூவிளனல் தொங்க வானை வீரட்டத் தானை வெள்ளேற்றி னைப், பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப் பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை, அறிதற் கரியசீ ரம்மான் தன்னை அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை, எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே.
    9. திருத்தூங்கானை மாடம் திருவிருத்தம்
    "பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்பம்" என்றெடுத்து முன்னாகி எப்பொருட்கும் முடிவாகி நின்றானைத் தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை நன்னாமத் திருவிருத்தம் நலஞ்சிறக்கப் பாடுதலும்.
    பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே
    10. கோயில் திருவிருத்தம்
    இத்தன் மையர்பல முறையுந் தொழுதெழ "என்றெய்தினை" எனமன்றாடும், அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற்றிடவரும் ஆனந்தம், மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி பாடிப் பின்னையும் மேன்மேலும், சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார்.
    ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லயுட் சிற்றம் பலத்துநட்டம் என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே
    11. கோயில் திருநேரிசை
    "பத்தனாய்ப் பாட மாட்டேன்" என்றுமுன் னெடுத்துப் பண்ணால் "அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வா"றென்(று) இத்திறம் போற்றி நின்றே இன்றமிழ் மாலை பாடிக் கைத்திருத் தொண்டு செய்யுங் காதலிற் பணிந்து போந்தார்.
    பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனெ பரம யோகி எத்தினாற் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டாம் முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே
    12. கோயில் திருக்குறுந்தொகை
    அருட்பெரு மகிழ்ச்சிபொங்க "அன்னம்பா லிக்கும்" என்னும், திருக்குறுந் தொகைகள் பாடித்திருவுழ வாரங்கொண்டு, பெருத்தெழு காதலொடும் பெருந்திருத்தொண்டு செய்து, விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட.
    அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
    13. திருக்கழிப்பாலை பண் – காந்தாரம்
    சினவிடையே றுகைத்தேறும் மணவாள நம்பிகழல் சென்று தாழ்ந்து வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே! என்கின்றாள்" என் றனையதிருப் பதிகமுடன் அன்புறுவண்டமிழ்பாடி அங்குவைகி நினைவரியார் தமைப்போற்றி நீடுதிருப் புலியூரை நினைந்து மீள்வார்.
    வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின்றாளா சினபவளத் திண்தோள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால், அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின்றாளால், கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
    14. கோயில் திருக்குறுந்தொகை
    மனைப்படப்பிற் கடற்கொழு ந்து வளைசொரியுங் கழிப்பாலை மருங்குநீங்கி, நனைச்சினைமென் குளிர்ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில், "நினைப்பவர்தம் மனங்கோயில் கொண்டருளும் அம்பலத்து நிருத்த னாரைத், தினைத்தனையாம் பொழுதுமறந் துய்வனோ" எனப்பாடித் தில்லை சார்ந்தார்.
    பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலத் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
    15. கோயில் பெரிய திருத்தாண்டகம்
    "அரியானை" என்றெடுத்தே அடியவருக் கெளியானை அவர்தஞ் சிந்தை, பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந் தமிழ்பாடிப் பிறங்குசோதி, விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்னம்பலத்து மேவி ஆடல், புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமிழாற்பின்னும் போற்றல் செய்வார்.
    அரியானை அந்தணர்தம் சிந்தை யானை அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும், தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக், கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நளெல்லாம் பிறவா நாளே.
    16. கோயில் திருநேரிசை
    "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்கும்" எனுஞ்சிறந்த வாய்மை, அருஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம் படிபாடி அன்பு சூழ்ந்த, நெஞ்சுருகப் பொழிபுனல்வார் கண்ணிணையும் பரவிய சொல் நிறைந்த வாயும், தஞ்செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்.
    செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா எறிக்குஞ் சென்னி நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறும் மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற்றம்ப லத்தே துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி யாடு மாறே.
    17. திருக்கழுமலம் திருவிருத்தம்
    பெரியபெரு மாட்டியுடன் தோணி மீது பேணிவீற்றிருந்தருளும் பிரான்முன் நின்று பரிவுறுசெந் தமிழ்மாலை பத்தியோடும் "பார்கொண்டு மூடி"எனுப் பதிகம் போற்றி அரியவகை புறம்போந்து பிள்ளை யார்தம் திருமடத்தில் எழுந்தருளி அமுது செய்து மருவியநண் புருவியநண் புறுகேண்மை அற்றை நாள்போல் வளர்ந்தோங்க உடன்பலநாள் வைகும் நாளில்.
    பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் நாலஞ்சு புள்ளினம் ஏந்தின என்பர் நளிர்மதியம் கால்கொண்ட வண்கைச் சடைவிரித் தாடுங் கழுமலவர்க் காளன்றி மற்றுமுண் டோஅந்த ணாழி அகலிடமே.
    18. திருவாவடுதுறை திருத்தாண்டகம்
    "ஆவடுதண் டுறையாரை அடைந்துய்ந் தேன்"என் றளவில் திருத்தாண்டகமுன் அருளிச்செய்து, மேவுதிருக் குறுந்தோகைநே ரிசையுஞ் சந்த விருத்தங்க ளானவையும் வேறு வேறு, பாவலர்செந் தமிழ்த் தொடையாற் பள்ளித் தாமம் பலசாத்தி மிக்கெழுந்த பரிவினோடும், பூவலயத் தவர்பரவப் பலநாள் தங்கிப் புரிவுறுகைத் திருத்தோண்டு போற்றிச் செய்வார்.
    நம்பனை நால்வேதங் கரைகண் டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக் கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச், செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை, அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடை ந்துய்ந் தேனே.
    19. திருச்சத்திமுற்றம் திருவிருத்தம்
    "கோவாய் முடுகி" என்றெடுத்துக் "கூற்றம் வந்து குமைப்பதன்முன் பூவா ரடிகள் என்றலைமேல் பொறித்து வைப்பாய்" எனப்புகன்று நாவார் பதிகம் பாடுதலும் நாதன் தானும் "நல்லூரில் வாவா" என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்.
    கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழுங் குந்தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.
    20. திருநல்லூர் திருத்தாண்டகம்
    "நனைந்தனைய திருவடிஎன் தலைமேல்வைத் தார்"என்று புனைந்ததிருத் தாண்டகத்தால் போற்றிசைத்துப் புனிதரருள் நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந்(து) ஒழியாத தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்.
    நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார், சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர், இனந்துருவி மணிமுகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி, நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறெ.
    21. பொது (விடந்தீர்த்த திருப்பதிகம்) பண் – இந்தளம்
    அன்றவர்கள் மறைத்தனுக் களவிறந்த கருணையராய்க் கொன்றைநறுஞ் சடையார்தம் கோயிலின்முன் கொணர்வித்தே "ஒன்றுகொலாம்" எனப்பதிகம் எடுத்துடையான் சீர்பாடப் பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.
    ஓன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.
    22. திருப்பழனம் பண் – பழந்தக்கராகம்
    புடைமாலை மதிக்கண்ணிப் புரிசடையார் பொற்கழற்கீழ் அடைமாலைச் சீலமுடை அப்பூதி அடிகள்தமை நடைமாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின் தொடைமாலைத் திருப்பதிகச் "சொன்மாலை" பாடினார்.
    சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ. வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.
    23. திருவாரூர் திருவிருத்தம்
    பற்றொன் றிலாவரும் பாதக ராகும் அமணர்தம்பால் உற்ற பிணியொழிந் துய்யப்போந் தேன்பெற லாவ(து)ஒன்றே? புற்றிடங் கொண்டான்தன் தொண்டர்க்துத் தோண்டராம் புண்ணிய"மென்று உற்ற உணர்வொடும் ஆரூர்த் திருவீதி உள்ளணைந்தார்.
    குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ அலம்பலம் பாவரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான் சிலம்பலம் பாவரு சேவடி யான்திரு மூலட்டானம் புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே
    24. திருவாரூர் போற்றித் திருத்தாண்டகம்
    கண்டு தொழுது விழுந்து கரசர ணாதி அங்கம் கொண்ட புளகங்க ளாக எழுந்தன்பு கூரக்கண்கள் தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப் புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து.
    கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி திருமூலட் டானனே போற்றி போற்றி.
    25. திருவாரூர் பண் - சீகாமரம்
    "காண்ட லேகருத் தாய் நினைந்(து)" என்னுங் கலைப்பதிகம்- தூண்டா விளக்கன்ன சோதிமுன் நின்று துதித்துருகி ஈண்டு மணிக்கோயில் சூழ வலஞ்செய் திறைஞ்சி அன்பு பூண்ட மனத்தொடு நீள்திரு வாயிற் புறத்தணைந்தார்.
    காண்டலேகருத் தாய் நினைந்திருந் தேன்மனம்புகுந் தாய்கழலடி பூண்டுகொண் டொழிந்தேன் புறம்போயி னாலறையோ, ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை மேலெழுகொடி வானிளம்மதி, தீண்டிவந் துலவுந் திருவாரூ ரம்மானே.
    26. திருவாரூர் (பழமொழி) பண் - காந்தாரம்
    செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றில் முன்தேவா சிரியன் சார்ந்து, "கொய்யுமா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக், கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேன்" என்று, எய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
    மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே, உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி யுழிதந்தென் உள்ளம் விட்டுக், கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக், கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்தகள்வ னேனே.
    27. திருவாரூர் பண் - காந்தாரம்
    நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக், கூடியஅன் பொடுகாலங் களில்அணைந்து கும்பிட்டுக் கோதில் வாய்மைப், "பாடிளம் பூதத்தினான்" எனும்பதிகம் முதலான பலவும் பாடி, நாடியஆர் வம்பெருக நைந்துமனங் கரைந்துருகி நயந்து செல்வார்.
    பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும் கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும் ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும் ஆடிளம் பாம்பசைத் தானும் ஆரூ ரமர்ந்தஅம் மானே.
    28. திருவாரூர் திருவிருத்தம்
    நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி அடிகள்திருத் தொண்டின் நன்மைப், பான்மைனிலை யால் அவரைப் பரமர்திரு விருத்தத்துள் வைத்துப் பாடித், தேன்மருவும் கொன்றையார் திருவாரூர் அரனெறியில் திகழுந் தன்மை, ஆனதிற மும்போற்றி அணிவீதிப் பணிசெய்தங் கமரும் நாளில்.
    ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.
    29. திருவாரூர் பண் – குறிஞ்சி
    சித்தம் நிலாவும் தென் திரு ஆரூர் நகராளும் மைத் தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம் இத் தகைமைத்து என்று என் மொழிகேன்? என்று அருள் செய்தார் முத்து விதான மணிப் பொன் கவரி மொழி மாலை
    முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
    30. திருவீழிமிழலை திருத்தாண்டகம்
    கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த அன்பு கரைந்துருக மெய்யில் வழியுங் கண்ணருவி விரவப் பரவுஞ் சொன்மாலை "செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றார்" என்(று) உய்யு நெறித்தாண் டகமொழிந்தங் கொழியாக் காதல் சிறந்தோங்க.
    போரானை ஈருரிவைப் போர்வை யானைப் புலியதளே யுடையாடை போற்றி னானைப் பாரானை மதியானைப் பகலானானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற, நீரானைக் காற்றானைத் தீயா னானை நினையாதார் புரமெரிய நினைந்த தெய்வத் தேரானை திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரெ.
    31. திருமறைக்காடு திருக்குறுந்தொகை
    உண்ணீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே பண்ணினேரு மொழியாள் என்று எடுத்துப் பாடப் பயன் துய்ப்பான் தெண்ணீர் அணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்கத் திருக் கடைக்காப்பு எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்.
    பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரொ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீர் எம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க இக்கத வந்திறப் பிம்மினே.
    32. திருவாய்மூர் திருக்குறுந்தொகை
    போதம் நிகழ வா என்று போனார் என் கொல் எனப் பாடி ஈது எம்பெருமான் அருளாகில் யானும் போவேன் என்று எழுந்து வேத வனத்தைப் புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே ஆதி மூர்த்தி முன் காட்டும் அவ் வேடத்தால் எழுந்து அருள. அழைத்துக் கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித் தேனுக்கே அல்லால் உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என
    எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடை யாளம் அருளினார் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனார தென்கொலோ. திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி அடைப்பித்தார் உண்ணின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.
    33. திருவாய்மூர் திருத்தாண்டகம்
    மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும் நேடி இன்னங் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காணக் காட்டுதலும் பாட அடியார் என்று எடுத்துப் பரமர் தம்மைப் பாடினார்
    பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக் கோட லரவார் சடையிற் கண்டேன் கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் வாடல் தலையொன்று கையிற் கண்டேன் வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.
    34. திருவாவடுதுறை திருநேரிசை
    பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப் பணிவார் பொற்பு அமைந்த ஆவுக்கு அருளும் ஆவடு தண் துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி நாவுக் கரசர் ஞானப் போன கர்க்குச் செம் பொன் ஆயிரமும் பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து பிறவும் பணிகின்றார்
    மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
    35. திருப்பழையாறை வடதளி திருக்குறுந்தொகை
    தலையின் மயிரைப் பறித்து உண்ணூம் சாதி அமணர் மறைத்தாலும் நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும் விலை இல் வாய்மைக்குறும் தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்
    தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.
    36. திருக்கச்சி ஏகம்பம் பண் - காந்தாரம்
    கரவாடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்துப் பரவாய சொல் மாலைத் திருப் பதிகம் பாடிய பின் விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின் அரவு ஆரம் புனைந்தவர் தம் திருமுன்றில் புறத்து அணைந்தார்
    கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.
    37. திருக்கச்சி ஏகம்பம் திருத்தாண்டகம்
    ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் எனப் போற்றிப் பாகம் பெண் உருவானைப் பைங் கண் விடை உயர்த்தானை நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திரு நீற்றின் ஆகந்தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்
    கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண் காற்றவன்காண் கனலவன்காண் கலிக்கும் மின்காண் கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன்காண் நிலாவூருஞ் சென்னி யான்காண் நிறையார்ந்த புனற்கங்கை நிமிர்ச டைமேல் ஏற்றவன்காண் எழிலாறும் பொழிலார் கச்சி ஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.
    38. திருவொற்றியூர் திருத்தாண்டகம்
    வண்டு ஓங்கும் செங் கமலம் என எடுத்து மனம் உருகப் பண் தோய்ந்த சொல் திருத் தாண்டகம் பாடிப் பரவுவார் விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம் கண்டு ஓங்கு களிச் சிறப்பக் கை தொழுது புறத்து அணைந்தார்
    வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித் திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோ கனார் உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார் கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே.
    39. திருப்பாசூர் திருக்குறுந்தொகை
    மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்துச் சிந்தை கரைந்து உருகு திருக் குறுந் தொகையும் தாண்டகமும் சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி எந்தையார் திரு அருள் பெற்று ஏகுவார் வாகீசர்
    முந்தி மூவெயி லெய்த முதல்வனார் சிந்திப் பார்வினை தீர்த்திடுஞ் செல்வனார் அந்திக் கோன்றனக் கேயருள் செய்தவர் பந்திச் செஞ்சடைப் பாசூ ரடிகளே.
    40. திருவாலங்காடு திருத்தாண்டகம்
    திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் ஒருவாத பெரும் திருத் தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்ப் பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் மருஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்
    ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே நீர்வளிதீ யாகாச மானார் தாமே கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே கோலப் பழனை யுடையார் தாமே சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
    41. திருக்காளத்தி திருத்தாண்டகம்
    காதணி வெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும் காதல் புரி மனம் களிப்பக் கண் களிப்பப் பரவசமாய் நாதனை என்கண்ணுளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்
    விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
    42. திருக்கயிலாயம் திருத்தாண்டகம்
    ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி ஆற்றல் பெற்ற அவ் அண்ணலார் அஞ்சு எழுத்து ஓதிப் பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்
    வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.
    43. திருவையாறு பண் - காந்தாரம்
    மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும் கோதறு தண் தமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதிகங்கள் வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம் காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார் கண்டு தொழுது வணங்கிக் கண் நுதலார் தமைப் போற்றிக் கொண்ட திருத் தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின் மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கு அரசர்
    மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
    44, 45. திருப்பூந்துருத்தி திருத்தாண்டகம்
    திருப்பூந் துருத்தி அமர்ந்த செஞ்சடையானை ஆன் ஏற்றுப் பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானைப் பொய்யிலியைக் கண்டேன் என்று விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப இருப்போம் திருவடிக்கீழ் நாம் என்னும் குறுந் தொகை பாடி
    எனக்கென்று மினியானை எம்மான் றன்னை எழிலாரு மேகம்பம் மேயான் றன்னை மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான் றன்னைத் தனக்கென்றும் அடியேனை யாளாக் கொண்ட சங்கரனைச் சங்கவார் குழையான் றன்னைப் புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் றன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே
    திருப்பூந்துருத்தி திருக்குறுந்தொகை
    கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக் கடிகொள் பூம்பொழிற் கச்சிஏ கம்பனார் பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர் அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
    46. திருப்பூந்துருத்தி திருவிருத்தம்
    அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று பொங்கு தமிழ்ச் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து தங்கித் திருத் தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்றுத் திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்
    மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய பாலனைப் பால்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேற் போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திமகிழும் ஆலனை ஆதிபு ராணனை நானடி போற்றுவதே.
    47. திருவாலவாய் திருத்தாண்டகம்
    எய்திய பேர் ஆனந்த இன்பத்தின் இடை அழுந்தி மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்துச் செய் தவத்தோர் தாண்டகச் செந்தமிழ் பாடிப் புறத்து அணைவார் கை தொழுது பணிந்து ஏத்தித் திரு உள்ளம் களி சிறந்தார்
    முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள் வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும் வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத் துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத் தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித் திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
    48. திருப்பூவணம் திருத்தாண்டகம்
    கொடி மாடம் நிலவு திருப் பூவணத்துக் கோயிலின் உள் நெடியானுக்கு அறிய அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி வடிவேறு திரிசூலத் தாண்டகத்தால் வழுத்திப் போய்ப் பொடி நீடு திருமேனிப் புனிதர் பதி பிற பணிவார்
    வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந்தோன்றும் கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும் இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும் பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
    49. திருவாரூர் திருத்தாண்டகம்
    இம் மாயப் பவத் தொடக்காம் இருவினைகள் தமை நோக்கி உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர் அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன் மின் நீர் என்று பொய்ம் மாயப் பெருங் கடலுள் எனும் திருத் தாண்டகம் புகன்றார்
    பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க் கில்லையே கிடந்துதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே
    50. திருப்புகலூர் திருவிருத்தம்
    மன்னிய அந்தக் கரணம் மருவுதலைப் பாட்டினால் தன்னுடைய சரண் ஆன தமியேனைப் புகலூரன் என்னை இனிச் சேவடிக்கீழ் இருத்திடும் என்று எழுகின்ற முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்
    தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
    51. திருப்புகலூர் திருத்தாண்டகம்
    மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத் தாண்டகத்தைப் புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று நண்ணரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்
    எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற் கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன் கழலடியே கைதொழுது காணி னல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
    திருச்சிற்றம்பலம்